நூலின் தலைப்பு:
தெய்வீக மருத்துவம் அல்லது ஆவிகளும் மனிதர்களும்
1992இல் வெளியிடப்பட்ட நூல்; வெளியீடு எண்: 211
மனிதர்களுக்கு உடல் நோய் வருவது போல், உயிருக்கும் நோய் வரும் என்பதை விளக்கி, உடல் நோய்க்கு மருத்துவம் இருப்பது போலவே உயிர் நோய்க்கும் மருத்துவம் உண்டு என்பதை விளக்கும் நூல் இது. உயிருக்கு நோய்கள் எந்த விதத்தில் வருகின்றன? இறப்புக்குப் பின் என்ன நிகழ்கின்றது? .. போன்ற கருத்துக்கள் விரிவாக விளக்கப் படுகின்றன.
நூலின் அளவு: 120 பக்கங்கள்; அட்டையும் படங்களும் 8 பக்கங்கள்; A5 size Book (A4 அளவில் பாதி)
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.