குருதேவரின் ஆணைப்படி அச்சிடப் பட்ட அறிவிக்கைகளில் கிடைத்தவை இங்கே உள்ளன.
1) இ.ம.இ.யின் தேர்தல் செயல்திட்டம்.
2) இறந்தவருக்காகச் செய்யப் படும் கருமாதி பற்றிய குருபாரம்பரிய வாசகத்துடன் இருக்கும் அறிவிக்கை.
3) 1988இல் மதுரைச் சுற்றுப்பயண அறிவிக்கை.
4) 1988 திருவரங்கப் பயிற்சி முகாம் அறிவிக்கை.
5) 1989 இராசிபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தலில் இ.ம.இ. வேட்பாளர் நின்றதை அறிவிக்கும் அறிவிக்கை.
6) 1990இல் காரணோடைக் குருமாரியம்மன் கோயிலில் பால்குடப் பெருவிழா நிகழ்ச்சி.
7) 1996இல் கரூரில் இ.ம.இ. நிகழ்ச்சி அறிக்கை - நிறைய எழுத்துப் பிழைகள் இதில் உள்ளன.
8) 1997இல் தஞ்சையில் திருவிளக்குப் பூசை அறிவிக்கை.
9) 1999இல் கடந்தப்பட்டி ஆதிசிவனார் கோயில் குடமுழுக்கு விழா அறிவிக்கை.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.