பதினெண்சித்தர்கள் வழங்கிய மெய்யான இந்துமதத்தின் உள்ள ஆவி, ஆன்மா, ஆருயிர் விளக்கம் இந்த அறிக்கையில் உள்ளது. இந்தப் புத்தக வடிவிலான அறிவிக்கையில் குருதேவரைப் பற்றிய ஓர் அறிமுகவுரையும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைப் பற்றிய விளக்க உரையும் இடம் பெற்றுள்ளன. இந்துமதத்தின் பத்துக் கட்டளைகளும் இதன் கடைசிப் பக்கத்தில் வழங்கப் பட்டுள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.