உள்ளுறையும் கட்டுரைகள்
1. எம்மதமும் சம்மதமா?
2. சமயமும் அறிவியலும்.
3. திருவள்ளுவரின் கடவுட் கொள்கை.
4. இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய கண்ணோட்டம்.
5. சிவராத்திரி பற்றிய புதிய செய்திகள்.
6. கேள்வி பதில்
7. இந்து வேதத்தையும் இந்து மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள்.
8. இந்து வேதமும், இந்து மதமும் அருளப் பட்ட மொழி.
9. பதினெண்சித்தர்களின் இந்து வேத இந்து மத விளக்க வெண்பாக்கள்.
PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்...
நேரடியாகப் படித்திட இங்கே Click செய்யவும்.
குறிப்பு:- இந்த வெளியீட்டுடன் 'இந்து ஆரணம்' இதழ்கள் அச்சிடுவது நின்று விட்டது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.