26-10-1985
1. ஞானசித்தர் மகான் பசும்பொன்னார் உ.முத்துராமலிங்கத் தேவர்.
2. சூரிய காயந்திரி மந்தரம்
3. இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய கண்ணோட்டம்.
4. இந்தியாவில் மார்க்சீயம் - 4
5. தமிழின மறுமலர்ச்சிப் போர் - 4
6. சோதியும் உண்மையும்...!
7. இந்துமத-ஹிந்துமத வேற்றுமை விளக்கத் தொடர்.
8. தீபாவளிக்கும், நரகாசுரனுக்கும் தொடர்பில்லை.
9. சித்தர் இராமாயணம்
10. கேள்வியும் நானே! பதிலும் நானே!
11. குருதேவரின் வணக்கவுரை
12. அன்புச் சேவுக! - சந்திப்போம்! சிந்திப்போம்!
13. திருவள்ளுவரின் கடவுட் கொள்கை - 3
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.