நூலின் தலைப்பு:
இந்து வேதம் - (ஒரு சுருக்க விளக்கம்)
1991இல் வெளியான நூல்
ஆதிசிவனார் வேதம் முதல் பிறம்ம வேதம் முடிய உள்ள இந்து வேதத்தின் சாரங்கள் இந்த நூலில் உள்ளன.
பதினெண்சித்தர்கள் இந்த மண்ணுலகத்தாருக்காக வழங்கிய வேதமே இந்து வேதம். இதுவே என்றும் இருக்கும் வேதமாக "இருக்கு வேதம்" எனப் பெயர் பெற்றது. ஆதிசிவனாரின் மகன் முருகன் காலத்தில் இந்த இருக்கு வேதத்தில் இருந்து எல்லாருக்கும் தேவையில்லாத கருத்துக்கள் எடுக்கப் பட்டு அசுர வேதம், யாம வேதம், அதர்வான வேதமாக பிரிக்கப் பட்டன.
இந்த இந்து வேதம் பற்றிய சுருக்க விளக்கத்தை இந்த நூல் வழங்குகின்றது.
நூலின் அளவு: 74 பக்கங்கள் அட்டையுடன்; படங்கள், விளமப்ரங்கள் சேர்க்காமல் 56 பக்கங்கள் உள்ள நூல் இது. A5 size Book (A4 அளவில் பாதி)
நூலை இங்கே click செய்து படிக்கவும்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.