நூலின் தலைப்பு:
சித்தர்கள் வரலாறும் இந்து மறுமலர்ச்சி இயக்கமும்.
1982இல் வெளியிடப் பட்டது.
இந்த நூல் பதினெண்சித்தர்களின் வரலாறு மூலமாக உலக வரலாற்றையே முழுமையையும் சுருக்கமாக விளக்கி உரைக்கின்றது. உலகத் தோற்றம் முதல் இந்த நூலின் ஆசிரியர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களின் காலம் வரை இதில் சுருக்கமாகச் சொல்லப் படுகின்றது. அதன் மூலம் இந்து மறுமலர்ச்சி இயக்கம் பற்றி விளக்கிடுகின்றது.
நூலின் அளவு: 14 பக்கங்கள் (அட்டையைச் சேர்க்காமல். அட்டை கிடைக்கவில்லை.); A5 Size (A4 sizeஇல் பாதி)
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.