1990க்கு மேல் குருதேவர் அவர்கள் இந்து வேதம் தொடர்பாக அச்சிட்ட அறிக்கைகளில் கிடைத்தவை இங்கே உள்ளன.
1. இந்து முன்னேற்றக் கழகம் - இந்து வேதம் வளர்ப்போம்! இந்துமதம் காப்போம்! என்ற தலைப்பில் உள்ளது.
2. பிறாமணரின் ஹிந்துமதம், தமிழரின் இந்துமதம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் இங்கே வழங்கப் படுகின்றன.
3. இந்துவேத முன்னேற்றக் கழகம் வழங்கிய அருளாட்சி அழைப்பு. அறிக்கை எண்: 786
4. இந்துவேத பாடசாலை வழங்கும் இந்து வேதம் அச்சிட நிதி வேண்டிடும் அறிக்கை.
5. இந்து வேத ஆகம பாடசாலை, காரணோடை வழங்கும் இந்து வேத வாசகங்கள் சில.
6. பதினெண்சித்தர் மடம், காரணோடை வழங்கும் இந்து வேத வாசகங்களில் சில.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.