இங்கே உள்ளீர்கள் :   ஆரம்பப் பக்கம் > அறிவிக்கைகள் > சித்தி பூசை விளக்கம்
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

சித்தி பூசை விளக்கம்

  சித்தரடியானாகவும், சித்தரடியாளாகவும், சித்தரடியாராகவும் தயாராகிட வருபவர்கள் செய்ய வேண்டிய பூசைமுறைகளும், குருவிற்குத் தர வேண்டிய உறுதிமொழிகளும், குருகாணிக்கை முறைகளும் இந்த அச்சிடப்பட்ட புத்தகத்தில் விளக்கமாக உள்ளன. கலியுகத்தில் தோன்றிச் செயல்பட்ட பீடாதிபதிகள் மூவரும் ஐம்புலன்களும் காண வாழுகின்ற நிலையில் இருப்பதாலும், விண்ணும் மண்ணும் இணைக்கும் பீடாதிபதியாக குருதேவர் செயல்பட்ட காரணத்தினாலும்; உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் இந்த முறைகளைத் தெரிந்து கொண்டு குருதேவரின் ஓவியத்தையோ, படத்தையோ வைத்துக் கொண்டு அருளுலக வாழ்க்கையில் தயாராகலாம்; அருட் சித்திகளைப் பெறலாம்.

   குருதேவரின் நேரடி மாணாக்கர்களில் யாராவது ஒருவரிடம் நேரிலோ, அஞ்சலிலோ, மின்னஞ்சலிலோ விளக்கங்களைப் பெறலாம்.

 ...... அறிக்கையை இங்கே படிக்கவும் ......

« முந்தைய பக்கம் மேலே செல்ல அடுத்த பக்கம் »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.

அருளாட்சி நாயகம்

11th Peedam தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை,  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || மாத வெளியீடுகள் || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |