26-12-1988
1. தமிழ் எழுத்தின் வரி வடிவங்கள்.
2. பயிலுதலும் பயிற்றுவித்தலும், ஓதுதலும் ஓதுவித்தலும், கற்றலும் கற்பித்தலும்.
3. அன்புச் சேவுக! - யார் வேண்டுமானாலும் பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசாகலாம்! பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசுகள் யாராகவும் மாறலாம்.
4. பழனிக்குக் கால்நடைப் பயணம் - இயக்கப் போர்க்கோலமே.
5. தமிழருக்கு மட்டும் தாழ்ச்சியேன்?!?!?!
6. உண்மையில் இந்து மதத்தின் வீழ்ச்சி நிலையா?
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.