நூலின் தலைப்பு:
வாருங்கள் எல்லோரும் சித்தர் ஆகலாம்!
இதற்கு முந்திய பக்கத்தில் இருக்கும் சித்தர்கள் மாநாட்டு வெளியீடு போலவே; ஆனால் மிகவும் விரிவான நூல் இது. முந்திய புத்தகத்தின் இரண்டாம் பாகம் இந்த நூல்.
எல்லோரும் சித்தர்கள் ஆகிடத் தேவையான கருத்து விளக்கங்களை குருதேவர் இந்த நூலில் வழங்கி உள்ளார்.
நூலின் அளவு: 48 பக்கங்கள்; அட்டையும் படங்களும் 6 பக்கங்கள்; A5 size Book (A4 அளவில் பாதி)
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.