இங்கே உள்ளீர்கள் :   ஆரம்பப் பக்கம் > நூல்கள் > இந்து வேதம் > 6. சாமி கும்பிடுவது எப்படி?
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

6. சாமி கும்பிடுவது எப்படி?

நூலின் தலைப்பு:

சாமி கும்பிடத் தெரியுமா? சாமி கும்பிடுவது எப்படி?

  கடவுளை வழிபடுவோர் பலராக இருந்தாலும், பலருக்கும் எப்படி வழிபடுவது என்பதில் ஏராளமான குழப்பங்களே உள்ளன. கோயிலுக்குச் செல்லுவோர் எண்ணற்றோராக இருந்தாலும், எல்லோருக்கும் எப்படி கோயிலைப் பயன்படுத்துவது? கோயிலைப் பயன்படுத்தினால் கிடைப்பது என்ன? என்பதெல்லாம் தெரியவே இல்லை என்பதை நடுவுநிலையில் இருந்து சிந்தித்தால் அனைவரும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

  இன்றைக்கு ஆன்மீக வெளியீடுகளும் போட்டி போட்டுக் கொண்டு குழப்பத்தையும், கற்பனைகளையும் அதிகப் படுத்திக் கொண்டேதான் போகின்றன. இந்தச் சூழ்நிலையில் குருதேவர் அவர்கள் 'சாமி கும்பிடத் தெரியுமா?' என்ற வினா எழுப்பி, 'சாமி கும்பிடுவது எப்படி? என்பதற்கான விடை தருகின்றார். அத்துடன் கோயில்களில் எப்படி வழிபடுவது?, குலதெய்வங்களை எப்படி வழிபடுவது? குடும்ப ஆண்டவர்களை எப்படி வழிபடுவது? என்பனவற்றையும் இந்த நூலில் விவரித்துள்ளார்.

நூலின் அளவு:  68 பக்கங்கள் அட்டை மற்றும் விளம்பரங்களுடன்; A5 size Book (A4 அளவில் பாதி)

PDF கோப்பாகப் படித்திட...

நூலை இங்கே click செய்து படிக்கவும்.

« முந்தைய பக்கம் மேலே செல்ல அடுத்த பக்கம் »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.

அருளாட்சி நாயகம்

11th Peedam தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை,  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || மாத வெளியீடுகள் || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |