நூலின் தலைப்பு:
ஞானாச்சாரியார் சித்தர் கருவூறாரின் வரலாற்றுச் சுருக்கம்.
முதல் பதிப்பு: 1990
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களைப் பற்றியும், அவர் உருவாக்கிய பிற்காலச் சோழப் பேரரசு பற்றியும் எழுதப் பட்டுள்ள ஒரு சிறு குறிப்பு நூல். மெய்யான இந்துமதப் பேரரசான பிற்காலச் சோழப் பேரரசு எப்படி வட ஆரிய மாயையினாலும், பிறாமணர்களின் வேத மதத்தாலும் வீழ்ந்தது என்ற குறிப்பு இந்த நூலில் உள்ளது.
நூலின் அட்டை தெளிவாகத் தெரிய வில்லை. ஆனால், உள்ளே இருக்கும் எழுத்துக்கள் எளிதில் படிக்கும் வண்ணம் உள்ளது.
நூலின் அளவு: 20 பக்கங்கள் (அட்டையைச் சேர்க்காமல்); Pocket size book.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.