தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டதாலும், தமிழ்மொழியைப் பேசுவதாலும் தமிழர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் தங்களுடைய இனத்தின் நிலை என்ன? தங்கள் இனத்தின் உண்மையான வரலாறு என்ன? தங்கள் இனத்திற்கு என்று தனித்தன்மை என்ன? .... என்பனவற்றை எல்லாம் சிந்திக்கும் திறன் இன்றி வாழுகின்றார்கள்.
இதற்குரிய காரண காரியங்களை ஆராய்ந்து இந்த நூல்களில் வெளிப் படுத்துகின்றார் குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.