இந்து மதம் யாண்டும் பரவி உள்ள இந்தியத் திரு நாட்டில் இந்து மதத்திற்குரிய ஏட்டறிவு, அதாவது இந்து வேதம் எங்கேயும் இல்லை. இப்படிப் பட்ட சூழலில் குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் தமக்கு நாட்டில் உரிய அறிமுகம் கிடைக்காவிடிலும் எதிர்காலச் சந்ததியினருக்காக இந்து வேத நூல்களை எழுதி வைத்தும் அச்சிட்டும் கொடுத்துள்ளார். குருதேவர் அவர்கள் அச்சிட்டுள்ள நூல்களை இங்கே படித்து அறியலாம்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.