26-5-1986
1. நமது தாயகம் - 2
2. சித்தர் இராமாயணம் - யக்ஞவல்லியின் இராமாயணம் - மெய்யான இராமன் வரலாறு.
3. மதுரை மாமூதூர் மீனாட்சியம்மன் ஆலயம்.
4. உடற்பயிற்சியே ஆவி ஆன்மா ஆருயிர் வளர்ச்சி.
5. மேல்மருவத்தூர் அடிகளாரை பத்திரிகைத் துறை இருட்டடிப்புச் செய்வதை விளக்கும் குறிப்பு.
6. அன்புச் சேவுக! - அருட்பணி விரிவாக்கத் திட்டம் பற்றி.
7. இந்தியாவில் மார்க்சீயம் - 11
8. அமாவாசை விரதமும் சுடுகாட்டுப் பூசையும் - 3
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.
அருளாட்சி நாயகம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.